பலியானோர் குடும்பத்துக்கு தலா ரூ.50,000 நிவாரணம்

சனி, 16 மே 2009 (07:48 IST)
மதுரை அருகே நடந்த சாலை விபத்தில் இறந்த 15 பேரின் குடும்பங்களுக்கு தலா ரூ.50,000 நிவாரணம் வழங்க முதலமை‌ச்ச‌ர் கருணாநிதி உத்தரவிட்டுள்ளார்.

இது தொட‌ர்பாக தமிழக அரசு வெளியிட்டு‌ள்ள செ‌ய்‌திக் குறிப்‌பி‌ல், விருதுநகரிலிருந்து மதுரை நோக்கி வந்து கொண்டிருந்த வேனும், மதுரையிலிருந்து கோவில்பட்டி நோக்கி சென்று கொண்டிருந்த தனியார் பேருந்தும் மோதிக்கொண்டது. இதில், சம்பவ இடத்திலேயே 15 பேர் உயிர் இழந்தனர். 7 பேர் படுகாயம் அடைந்தனர்.

இந்த துயர சம்பவம் குறித்து அறிந்ததும் முதலமை‌ச்சர் கருணாநிதி அதிர்ச்சியும், வேதனையும் அடைந்தார். உயிர் இழந்தவர்களின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்ததுடன், அவர்களின் குடும்பத்திற்கு முதல்வர் பொது நிவாரண நிதியிலிருந்து தலா ரூ.50,000 வீதம் உதவியாக வழங்க முதல்வர் கருணாநிதி உத்தரவிட்டுள்ளார் எ‌ன்று கூற‌ப்ப‌ட்டு‌ள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்