10 ஆம் வகுப்பு தேர்வு முடிவு - திருப்பூர் மாவட்ட மாணவிகள் 3 பேர் முதலிடம்

வியாழன், 21 மே 2015 (11:33 IST)
தமிழகத்தில் பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியானதில், திருப்பூரைச் சேர்ந்த மாணவிகள் மூன்று பேர் மாநிலத்தில் முதலிடம் பெற்றுள்ளனர்.
 
தமிழகம் முழுக்க 11, 15, 906 மாணவர்கள் தேர்வு எழுதியுள்ளனர். 10 ம்வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று காலை 10 மணி அளவில் வெளியானது. தேர்வு முடிகளை அரசுதேர்வுகள்துறை இயக்குனர் தேவராஜன் வெளியிட்டார்.
 
இதில், திருப்பூர் மாவட்டத்தில் 3 மாணவிகள் 499 மதிப்பெண்கள் பெற்று மாநிலத்தில் முதலிடம் பிடித்துள்ளனர். 14 பேர் 2 ஆவது இடமும், 17 பேர் மாநிலத்தில் 3 ஆவது இடமும் பெற்றுள்ளனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்