நேற்று கருணாநிதி- இன்று வைகோ: கலர் மாறும் பரூர் அப்துல்லா

புதன், 10 பிப்ரவரி 2016 (23:46 IST)
ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வர் பரூக் அப்துல்லா, சென்னையில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோவை  நேரில் சந்தித்து பேசிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 

 
தமிழகத்தில் திமுகவுடன் கூட்டணி அமைக்க வேண்டும் என்றும், அதற்காக ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வர் பரூக் அப்துல்லாவை காங்கிரஸ் கட்சி தனது தூதுவராக பரூக் அப்துல்லாவை அனுப்பிவைத்ததாக கூறப்படுகிறது.
 
நேற்று சென்னை கோபாலபுரத்தில் திமுக தலைவர் கருணாநிதியை நேரில் சந்தித்து , பரூக் அப்துல்லா பேசினார்.
 
இந்த நிலையில், சென்னை அண்ணா நகரில் உள்ள வைகோவின் பரூக் அப்துல்லா இல்லத்திற்கு சென்று பேச்சுவார்த்தை நடத்தினார். இந்த சந்திப்பு குறித்து வைகோ கூறுகையில், இது நட்பு ரீதியிலான சந்திப்பு என்றார். 

வெப்துனியாவைப் படிக்கவும்