நேரில் ஆஜராகா விட்டால் கைது வாரண்ட்- விஜய்காந்திற்கு எச்சரிக்கை

செவ்வாய், 12 பிப்ரவரி 2013 (11:59 IST)
FILE
முதல்வர் பற்றி அவதூறாகப் பேசியதாகத் தொடரப்பட்ட வழக்கில், விஜயகாந்த் நேரில் ஆஜராகாததால், அவருக்கு நீதிபதி எச்சரிக்கை விடுத்தார்.

விஜயகாந்த் வரும் 25ம் தேதி நேரில் ஆஜராகாவிட்டால் கைது வாரண்ட் பிறப்பிக்கப்படும் என்று விழுப்புரம் முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி தியாகராஜமூர்த்தி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இந்த வழக்கில் மூன்று முறை நேரில் ஆஜராகக் கூறி நீதிமன்றம் அறிவுறுத்தியும் விஜயகாந்த் நேரில் ஆஜராகவில்லை.

இதனால் நீதிபதி இந்த அதிரடி உத்தரவை வெளியிட்டுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்