நான் முதலமைச்சர் ஆக வேண்டும் என்று தொண்டர்கள் ஆசைப்படுகிறார்கள். ஆனால் எனக்கு முதல்வர் ஆக வேண்டும் என்று கனவு கிடையாது. பிரதமராக வேண்டும் என்பதே எனது லட்சியம். தமிழகத்தில் சமத்துவ மக்கள் கட்சி ஆட்சி அமைந்தால் எனது முதல் கையெழுத்து பூரண மதுவிலக்கை அமல்படுத்துவதாகத்தான் இருக்கும்.அ.தி.மு.க. கூட்டணியில் நாங்கள் இருந்தபோது எனது பிரசாரத்தால் 8 சதவீத வாக்கு அதிகரித்தது என்பது மறுக்க முடியாத உண்மை என்று கூறினார்.