நாஞ்சில் சம்பத்துக்கு ‌பிணை கோரி மனைவி மனு

புதன், 1 ஏப்ரல் 2009 (18:17 IST)
இந்திய இறையாண்மைக்கு எதிராக பேசியதாக தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டு கோவை சிறையில் அடைக்கப்பட்டுள்ள ம.ி.ு.க. கொள்கை பரப்பு செயலர் நாஞ்சில் சம்பத்து‌க்கு ‌‌பிணை கோ‌ரி அவரது மனை‌வி ச‌சிகலா செ‌ன்னை உய‌ர் ‌நீ‌திம‌ன்ற‌த்த‌ி‌ல் மனு தா‌க்க‌ல் செ‌ய்து‌ள்ளா‌ர்.

சென்னை உய‌ர் ‌நீ‌திம‌ன்ற‌த்‌தி‌ல் அவ‌ர் தாக்கல் செய்துள்ள மனு‌வி‌‌ல், 'இந்திய இறையாண்மைக்கு எதிராக பேசினார் என்று நாஞ்சில் சம்பத்தை கைது செய்துள்ளனர். இது சட்ட விரோதமானது. அவரை ‌‌பிணை‌யி‌ல் விடுதலை செய்யவேண்டும்' என்று கோரியுள்ளார்.

இந்த வழக்கு நாளை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படுகிறது. அப்போது ம.ி.ு.க பொதுச்செயலர் வைகோ ஆஜராவார் என்று தெரிகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்