இந்து அறநிலையத் துறை ஆணையர் பிச்சாண்டி உள்பட சில ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
கால்நடை மற்றும் பராமரிப்புத் துறை ஆணையர் பி.ஆர்.சம்பத், இந்து அறநிலையத் துறை ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார். இந்த பதவியில் இருந்த பிச்சாண்டி, வரும் 30ஆம் தேதியுடன் ஓய்வு பெறுகிறார்.
டிட்கோ தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் ராமசுந்தரம், பொதுப்பணித் துறை செயலராக மாற்றப்பட்டுள்ளார். பொதுப்பணித் துறை செயலராக இருக்கும் ஆதிசேஷய்யா 30ஆம் தேதி ஓய்வு பெறுகிறார்.
நிதித்துறை சிறப்பு செயலர் அனிதா பிரவீன், டிட்கோ தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார். பொதுத் துறை இணை செயலராக இருக்கும் தர்மேந்திர பிரதாப் யாதவ், வீட்டுவசதி வாரிய நிர்வாக இயக்குநராக மாற்றப்பட்டுள்ளார்.