சொத்துக்குவிப்பு வழக்கில் முதலமைச்சர் ஜெயலலிதாவின் முன்னாள் தோழி சசிகலா, கேள்விகளை தமிழில் மொழிப்பெயர்க்க கோரிய மனுவை கர்நாடக உயர் நீதிமன்றம் நிராரிகத்துள்ளது.
சொத்துக் குவிப்பு வழக்கு விசாரணைக்கான கேள்விகளை ஆங்கிலத்திற்கு பதிலாக, தமிழில் கேட்டு, தமிழிலேயே பதிவு செய்துக் கொள்ளுமாறு பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் சசிகலா மனுத் தாக்கல் செய்திருந்தார்.
பெங்களூரு நீதிமன்றத்தில் ஆங்கிலத்திலோ, அல்லது கன்னடத்திலோ தான் கேள்விகளை கேட்க முடியும் என்று கூறி நீதிபதி மல்லிகார்ஜுனையா கடந்த ஆண்டு நவம்பர் மாதம் மனுவை நிராகரித்தார்.
இந்த நிலையில் கர்நாடக உயர் நீதிமன்றத்தில் சசிகலா மேல்முறையீடு செய்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி ஆனந்த்தா, பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தின் உத்தரவில் தலையிட முடியாது என்று கூறி மனுவை நிராகரித்தார்.