தமிழக பட்ஜெட் சிறப்பு அம்சங்கள்
வியாழன், 4 ஆகஸ்ட் 2011 (12:17 IST)
தமிழக அரசின் 2011- 2012 ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை சட்டப்பேரவையில் நிதியமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் இன்று தாக்கல் செய்தார்.
அவர் தாக்கல் செய்துள்ள நிதிநிலை அறிக்கையின் முக்கிய அம்சங்கள் வருமாறு:
* 106 கோவில்களில் அன்னதானத்திட்டம் விரிவுபடுத்தப்படும்.
* 1,006 கோவில்களுக்கு புனரமைப்பு பணிகள் முடிக்கப்பெற்று குடமுழுக்கு செய்யப்படும்.
* கோயில் அர்ச்சகர்கள், ஒதுவார்கள், இசை வாணர்கள், கிராம பூசாரிகள் மாத ஓய்வூதியம் ரூ.1000 ஆக உயர்வு
* சேலம், நெல்லையில் சைபர் கிரைம் குற்றப்பிரிவு
* சென்னை மாநகர குடிநீர் சேமிப்பு கொள்ளளவு 4.20 டி.எம்.சியாக உயர்த்தப்படும்
* ஓசூரில் சர்வதேச தரத்துடன் கோழி வளர்ப்பு மேலாண்மை மையம்
* விசைப்படகுகள் எண்ணிக்கை உயர்த்த திட்டம்; நடப்பு ஆண்டில் புதிதாக 500 விசைப் படகுகள் வழங்க மானிய விலையில் கடன் ஏற்பாடு
* ரூ. 74 கோடியில் புதிய மீன் இறங்குதளங்கள்.
* நாகை, பழையாறில் மீன்பிடித்துறை அமைக்கப்படும்
* நடப்பாண்டில் இலவச அரிசி வழங்கும் திட்டத்துக்கு ரூ.4,500 கோடி ஒதுக்கீடு
* கடலோர நகரங்களில் 13 மீன் பதப்படுத்தப்படும் மையம் அமைக்கப்படும்
* ரூ.367 கோடியில் அணைகள், ஏரிகள், கால்வாய்கள் சீரமைக்கப்படும்.
* வட்டியில்லா பயிர்க்கடனாக ரூ.3 ஆயிரம் கோடி வழங்க இலக்கு
* 5 ஆண்டுகளில் 60 ஆயிரம் கறவை மாடுகள் வழங்கப்படும்
* ஸ்ரீரங்கம் தொகுதியில் தேசிய சட்டப்பள்ளி அமைக்கப்படும்.
* நலத்திட்டங்கள் உரிய காலத்தில் பயனாளிகளுக்கு சென்றடைய நடவடிக்கை.
* காவல்துறையை நவீனப்படுத்த ரூ.51 கோடி ஒதுக்கீடு
* காவிரி ஆற்றின் குறுக்கே முத்தரசநல்லூரில் ரூ.32 கோடியில் தடுப்பணை கட்டப்படும்.
* சென்னை புறநகர் காவல் ஆணையம் சென்னை காவல் ஆணையத்துடன் இணைக்கப்படும்.
* இரண்டு காவல்துறை ஆணையத்தையும் இணைத்து சென்னை பெருநகர காவல்துறை ஆணையம் அமைக்கப்படும்.
சென்னை பெருநக காவல்துறை ஆணையம் 4 மண்டலங்களாக இருக்கும்.
* தீயணைப்புத்துறைக்கு கருவிகள் வாங்க, 10 கட்டிடங்கள் கட்ட ரூ.170 கோடி ஒதுக்கீடு
* போடியநாயக்கனூரில் புதிய அரசு பொறியியல் கல்லூரி தொடங்கப்படும்.
* ரூ.130 கோடி செலவில் நீதிமன்றங்களுக்கு சொந்த கட்டிடம் கட்ட நடவடிக்கை
* சிறைத்துறையை வலுப்படுத்த கைதிகள் மறுவாழ்வுத் திட்டத்துக்கு ரூ.147 கோடி ஒதுக்கீடு
* சென்னை அருகே கடல் நீரை குடிநீராக்கும் ஆலை நிறுவ ஆய்வு மேற்கொள்ளப்படும்.
* சிறைச்சாலையை மேம்படுத்த ரூ.117 கோடி ஒதுக்கீடு
* காய்கறி, தோட்டக்கலை பயிர்களின் உற்பத்தியை பெருக்க நடவடிக்கை
* மதிப்பிடப்பட்ட அளவை விட விழுக்காடு கூடுதலாக திட்டப் பணிகள் நிறைவேற்றப்படும்.
* 4 லட்சம் சதுர மீட்டர் பரப்பளவில் பசுமைக்குடில் அமைக்கப்படும்
* கூட்டுறவு உற்பத்தி இணையத்திற்கான வட்டியில்லா முன்பணம் 150 கோடியாக உயரும்
* கூட்டுறவுத்துறை மூலம் பெற்ற கடனை உரிய காலத்தில் திருப்பி செலுத்துவோருக்கு சலுகை
* ஏழை குடும்பத்துக்கு 4 ஆடுகள் வழங்க ரூ.130 கோடி ஒதுக்கீடு
* நடப்பாண்டில் கறவை மாடுகள் வழங்க ரூ.56 கோடி ஒதுக்கீடு
* நடப்பு நிதி ஆண்டில் 111 லட்சம் மெட்ரிக் டன் நெல் உற்பத்தி.
* ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டத்துக்கு ரூ. 400 கோடி ஒதுக்கீடு.
* நெல்லை, ஒரத்தநாட்டில் கால்நடை மருத்துவக் கல்லூரிகள் தொடங்கப்படும்