அதைத் தொடர்ந்து அனைத்து வாக்காளர்களும் ஓட்டுப்போட ஏதுவாக 1951-ஆம் ஆண்டு மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் 135 பி அடிப்படையில் தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலின்படி தமிழகத்தில் உள்ள தொழில் நிறுவனங்கள், திரையரங்குகள், தொழிற்சாலைகள், தோட்ட நிறுவனங்கள், மோட்டார் போக்குவரத்து நிறுவனங்கள், பீடி மற்றும் சுருட்டு நிறுவனங்கள் ஆகியவற்றில் பணிபுரியும் அனைத்து பணியாளர்களுக்கும் வியாழக்கிழமை (தினக்கூலி, தாற்காலிக, ஒப்பந்த பணியாளர்கள்) சம்பளத்துடன் கூடிய விடுமுறை அளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இது குறித்து ஏற்கெனவே ஊடகங்கள் மூலமாக தெரிவிக்கப்பட்டுள்ளது.