தமிழ்நாட்டிற்கு ரூ.28,000 கோடி ஒதுக்கீடு

திங்கள், 4 ஜூன் 2012 (18:16 IST)
தமிழகத்துக்கு 2012- 13ம் நிதியாண்டுக்காக ரூ 28 ஆயிரம் கோடியை மத்திய அரசு ஒதுக்கியுள்ளது.

முன்னதாக மத்திய திட்டக்குழுக் கூட்டம் தில்லியில் இன்று காலை நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக முதல்வர் ஜெயலலிதா தில்லி சென்றிருந்தார்.

கடந்த ஆண்டு தமிழக திட்டப் பணிக்காக ரூ 23 ஆயிரத்து 535 கோடி ஒதுக்கப்பட்டது. கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு ரூ 4465 கோடி கூடுதலாக நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. எனினும் இந்த நிதி ஒதுக்கீடு போதாது என்று ஜெயலலிதா அதிருப்தி தெரிவித்தார்.

வெப்துனியாவைப் படிக்கவும்