தமிழகத்திற்கு புதிதாக 3,000 பேருந்துகள்: அமைச்சர் நேரு

ஞாயிறு, 28 ஜூன் 2009 (12:01 IST)
தமிழக அரசு போக்குவரத்துக் கழகத்திற்கு ரூ.500 கோடி செலவில் புதிதாக 3,000 பேருந்துகள் வாங்கப்படும் என போக்குவரத்துத் துறை அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார்.

விழுப்புரம் கோட்ட அரசு போக்குவரத்து கழகத்தில் நடந்த நிகழ்ச்சியில் அமைச்சர் கே.என். நேரு கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறுகையில், தமிழக அரசு போக்குவரத்து கழகங்களுக்கு ரூ.500 கோடி செலவில் இந்த ஆண்டு புதிதாக 3,000 புதிய பேருந்துகள் வாங்கப்படும்.

இதில் 350 பேருந்துகள் விழுப்புரம் கோட்டத்துக்கு ஒதுக்கப்படும். சென்னையில் இருந்து விழுப்புரத்துக்கு வால்வோ குளிர் சாதன பேருந்து விரைவில் இயக்கப்படும். கடந்த 3 ஆண்டுகளில் போக்குவரத்து கழகங்களில் 39,900 பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது என அவர் தெரிவித்தார்.

வெப்துனியாவைப் படிக்கவும்