தஞ்சை, திருவாரூர், நாகை உள்ளிட்ட டெல்டா மாவட்டத்தில் 3 லட்சம் ஹெக்டேர் சம்பா பயிர்கள் தண்ணீரில் மூழ்கியதால் விவசாயிகள் கவலையில் ஆழ்ந்துள்ளனர்.
வங்க கடலில் ஏற்பட்ட புயல் காரணமாக தஞ்சை, திருவாரூர், நாகை மாவட்டத்தில் கடந்த 5 நாட்களாக தொடர் மழை பெய்தது. நாகை மாவட்டத்தில் சீர்காழி, தலைஞாயிறு, வேதாரண்யம், மயிலாடுதுறை உள்ளிட்ட பகுதிகளில் பயிரிடப்பட்டிருந்த சம்பா பயிர்கள் நீரில் மூழ்கியது.
திருவாரூர் மாவட்டத்தில் முத்துப்பேட்டை, திருத்துறைப்பூண்டி, மன்னார்குடி ஆகிய பகுதிகளிலும் சம்பா பயிர்கள் வெள்ளத்தில் மூழ்கி உள்ளது. இன்று மழை ஓய்ந்ததால் தண்ணீர் வடிய தொடங்கியது.
தஞ்சை மாவட்டம் களிமேடு, சக்கரசாமந்தம், தென்னங்குடி, பள்ளியேறி, திருவையாறு அருகே உள்ள கண்டிïர், திருப்பூந் துருத்தி, ஒரத்த நாடு அருகே உள்ள மேலஉளூர், பொன்னாப்பூர், தென்னமநாடு போன்ற பகுதிகளிலும் சம்பா பயிர்கள் வெள்ளத்தில் மூழ்கி உள்ளளது.
தஞ்சை, திருவாரூர், நாகை மாவட்டத்தில் சுமார் 3 லட்சம் ஹெக்டேர் பயிர்கள் வெள்ளத்தில் மூழ்கி உள்ளது. இதனால் விவசாயிகள் ஆழ்ந்த கவலையில் ஆழ்ந்துள்ளனர்.