சட்டப்பேரவையில் இன்று தி.மு.க. உறுப்பினர் ராமகிருஷ்ணன், ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டம் எப்போது செயல்பாட்டுக்கு வரும் என்று கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதில் அளித்து பேசிய அமைச்சர் கே.பி. முனுசாமி, ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டம் இந்த ஆண்டு இறுதியில் வர உள்ளது என்றும் இந்த திட்டத்தை முதல்வர் தொடங்கி வைப்பார் என்றும் கூறினார்.
இதைத் தொடர்ந்து உறுப்பினர் அழகுவேல் எழுப்பிய கேள்வி, கள்ளக்குறிச்சி தொகுதியில் உள்ள கூட்டுறவு சர்க்கரை ஆலைக் கழிவில் இருந்து டிசம்பரில் மின்சார உற்பத்தி தொடங்கும் என்றார்.