சேது சமுத்திரத் திட்டத்தை விரைந்து முடிக்க கருணாநிதி வேண்டுகோள்
திங்கள், 2 ஏப்ரல் 2012 (19:21 IST)
FILE
சேது சமுத்திரத் திட்டத்தை மத்திய அரசு விரைந்து முடிக்க வேண்டும் என தி.மு.க., தலைவர் கருணாநிதி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
சேது சமுத்திரத் திட்டத்தை எதிர்த்து உச்ச நீதி மன்றத்தில் பல மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இது தொடர்பான வழக்கில் உச்ச நீதிமன்றம் மத்திய அரசின் கருத்தை கேட்டு இருந்தது.
இந்நிலையில் தமிழக முதல்வர் ஜெயலலிதா பிரதமருக்கு எழுதிய கடிதத்தில் ராமர் பாலத்தை தேசிய சின்னமாக அறிவிக்க வேண்டும் என்றும் இந்த கருத்தை மத்திய அரசு உச்ச நீதி மன்றத்தில் தெரிவிக்க வேண்டும் என்றும் கூறியிருந்தார்.
தமிழக முதல்வரின் கோரிக்கை முன்னுக்குப் பின் முரணானது என்று தி.மு.க., தலைவர் கருணாநிதி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: சேது சமுத்திர திட்டத்திற்கு கடந்த 2001 ல் முதல்வர் ஜெயலலிதா ஆதரவு அளித்தார். ஆனால் தற்போது அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கிறார்.
சேது சமுத்திர திட்டத்தால் திமுக., விற்கு நற்பெயர் கிடைத்துவிடும் என எண்ணி அதனை எதிர்க்கிறார் என தி.மு.க., தலைவர் கருணாநிதி குற்றம் சாட்டியுள்ளார்.