செ‌ன்னை வா‌ல்மா‌ர்‌ட் ‌குடோனு‌க்கு ‌சீ‌ல் வை‌த்தது த‌மிழக அரசு

செவ்வாய், 19 பிப்ரவரி 2013 (15:49 IST)
FILE
சென்னை வானகரத்தில் வால்மார்ட் நிறுவனத்தின் கிடங்குக்கு சென்னை பெருநகர வளர்ச்சிக்குழும அதிகாரிகள் இன்று சீல் வைத்தனர்.

வானகரத்தில் வால்மார்ட் நிறுவனத்திற்கு கிடங்கு கட்டும் பணிகள் அண்மையில் நடந்தன. இந்த கிடங்குக்கு முதல் மற்றும் தரைத்தளம் கட்ட மட்டுமே அனுமதி வழங்கப்பட்டிருந்தது. ஆனால் அனுமதியின்றி 3 ஆவது தளம் வரை கட்டடம் கட்டப்பட்டது.

இதுகுறித்து கடந்த ஆண்டு ஜனவரி 27ஆம் தேதி நோட்டீஸ் அனுப்பப்பட்டது. இந்த நோட்டீசின் பேரில் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

இதையடுத்து இன்று காலை பத்து மணி அளவில் சென்னை பெருநகர வளர்ச்சிக்குழும அலுவலர்கள் வால்மார்ட் கிடங்குக்கு சீல் வைத்தனர்.

மாநகர வளர்ச்சிக்குழும அதிகாரிகளின் நடவடிக்கைக்கு வணிகர் சங்க பேரமைப்பைச் சேர்ந்தவர்கள் பட்டாசு வெடித்தும், இனிப்பு வழங்கியும் கொண்டாடினர்.

வெப்துனியாவைப் படிக்கவும்