சென்னை விமான நிலையத்தில் கால் டாக்சி சேவை தொடக்கம்

ஞாயிறு, 23 ஆகஸ்ட் 2009 (16:42 IST)
சென்னை விமான நிலையத்தில் கால் டாக்சி சேவையை மின்துறை அமைச்சர் ஆற்காடு வீராசாமி தொடங்கிவைத்தார்.

சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் 'பாஸ்ட் டிராக்' கால் டாக்சி நிறுவனத்தின் சேவை இன்று தொடங்கியது. இதை மின்துறை அமைச்சர் ஆற்காடு வீராசாமி தொடங்கி வைத்தார்.

இந்நிறுவனத்தில் 200 கால் டாக்சிகள் உள்ளன. சென்னை விமான நிலையத்தில் இருந்து பயணிகள் செல்லும் இடம் வரையிலான கட்டணம் மட்டுமே வசூலிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவிலேயே முதன் முதலாக மீனம்பாக்கம் விமான நிலையத்தில் தான் இந்த சேவை தொடங்கப்பட்டுள்ளது.

'பாஸ்ட் டிராக்' நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் ரெட்சன் அம்பிகாபதி தலைமையில் நடந்த துவக்கவிழாவில் தமிழக ஓட்டுனர்கள் உரிமையாளர் சங்க நிர்வாகிகள் உள்பட ஏராளமானோர் கலந்துக் கொண்டனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்