கடந்த மாதம் 31ஆம் தேதி லண்டன் சென்ற மு.க.ஸ்டாலின் 12 நாட்கள் அங்கு தங்கியிருந்தார். இந்நிலையில் சுற்றுப் பயணத்தை முடித்துக் கொண்டு பிரிட்ஷ்ஸ் ஏர்வேஸ் விமானம் மூலம் இன்று அதிகாலை 3.50 மணிக்கு சென்னை விமான நிலையம் வந்து சேர்ந்தார்.
அவருடன் மனைவி துர்கா ஸ்டாலின், நண்பர் ராஜாசங்கர் ஆகியோரும் உடன் வந்தனர்.
விமான நிலையத்தில் அமைச்சர் துரைமுருகன், மத்திய அமைச்சர்கள் ஜெகத்ரட்சகன், நெப்போலியன் ஆகியோர் வரவேற்றனர்.
விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய மு.க.ஸ்டாலின், தனிப்பட்ட முறையில் லண்டன் சென்று வந்திருக்கிறேன் என்றும் சொல்வதற்கு வேறு எதுவும் இல்லை என்றும் கூறினார்.