சென்னையில் சிறுவன் மீது துப்பாக்கிச் சூடு

ஞாயிறு, 3 ஜூலை 2011 (17:19 IST)
சென்னை சென்ட்ரல் அருகே தடைசெய்யப்பட்ட ராணுவப் பகுதிக்குள் நுழைந்ததாகக் கூறப்படும் 13 வயது சிறுவன் ஒருவன் மீது ராணுவத்தினர் துப்பாக்கியால் சுட்டனர்.

இதில் காயமடைந்த அந்த சிறுவன் அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

இதனிடையே சிறுவன் காயமடைந்த தகவல் அறிந்ததும் அப்பகுதி மக்கள் போராட்டம் நடத்தினர்.

இதனால் அங்கு பரபரப்பு நிலவி வருகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்