சிவாஜி சிலையை அகற்ற சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

வியாழன், 23 ஜனவரி 2014 (13:28 IST)
சென்னை மெரினா கடற்கரையில் உள்ள சிவாஜி கணேசன் சிலையை அகற்ற சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னையை சேர்ந்த சீனிவாசன் என்பவர் தொடர்ந்த வழக்கில் உயர்நீதிமன்றம் மேற்கண்ட உத்தரவை பிறப்பித்துள்ளது.
FILE

போக்குவரத்திற்கு இடையூறாக உள்ள சிவாஜி சிலையை அந்த இடத்திலிருந்து அகற்றக்கோரி இந்த வழக்கு தொடரப்பட்டது. முன்னதாக சிவாஜி சிலையை அகற்ற கூடாது என சிவாஜி கணேசன் சமூகப்பேரவை மனுத்தாக்கல் செய்தது.

மனுக்களை விசாரித்த நீதிபதிகள் அக்னி ஹோத்ரி, சசிதரன் அமர்வு சிலையை அகற்ற உத்தரவிட்டது. எவ்வளவு விரைவில் சிலையை அகற்ற முடியுமோ அகற்றலாம் என்று தமிழக அரசுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்