இந்நிலையில் கடந்த 14.02.2013 அன்று மாணவி, பள்ளிக்கு சென்று கொண்டிருந்தாள். அப்போது அங்கு வந்த ரகுபிரசாத் மாணவியை வீட்டுக்கு அழைத்துச் சென்றுள்ளார். அங்கு அந்த மாணவியை பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது.
இச்சம்பவம் குறித்து, கோபி மகளிர் காவல் நிலையத்தில் அம்மாணவி தரப்பில் புகார் செய்யப்பட்டது. இப்புகார் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்திய காவல்துறையினர் ரகுபிரசாத்தை கைது செய்து சிறையிலடைத்தனர்.
இத்ந வழக்கை விசாரித்த ஈரோடு மகளீர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. நீதிபதி சர்வமங்களா, மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த ரகுபிரசாத்துக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனையும் ரூ.10 ஆயிரமும், மேலும் பாதிக்கப்பட்ட மாணவிக்கு ரூ.1 லட்சம் இழப்பீட்டுத் தொகை வழங்க வேண்டும் என்றும் தீர்பளித்துள்ளார்.