சங்கரன்கோவில் இடைத்தேர்தல் வேட்பாளர்: திமுக முக்கிய அறிவிப்பு

சனி, 4 பிப்ரவரி 2012 (20:06 IST)
சங்கரன்கோவில் இடைத்தேர்தலில் வேட்பாளராக போட்டியிட விரும்பும் கட்சியினர் பிப்ரவரி 13 ஆம் தேதிக்குள் தங்களது விண்ணப்பங்களை அனுப்பிவைக்குமாறு திமுக அறிவித்துள்ளது.

இது தொடர்பாக அக்கட்சி இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில்," விரைவில் நடைபெற உள்ள சங்கரன் கோவில் இடைத்தேர்தலில் போட்டியிட விரும்புவோர், பிப்ரவரி 13 ஆம் தேதிக்குள் தங்களது விபரங்கள் நிரப்பப்பட்ட விண்ணப்பப் படிவங்களை கட்சி தலைமைக் கழகத்திற்கு அனுப்பிவைக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

விண்ணப்பப் படிவத்தின் விலை ரூ.2,500.ஐநூறு ரூபாய் முன்பணமாகச் செலுத்தி விண்ணப்பப் படிவத்தை பெற்றுக் கொள்ளலாம் " எனக் கூறப்பட்டுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்