சென்னையில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் பேராசிரியராக பணியாற்றி வந்தவர் நடராஜன். இவர் தனது மனைவி விஜயலட்சுமியை கொலை செய்து, பூந்தமல்லி அருகே உள்ள காட்டுப்பாக்கத்தில் கிருஷ்ணா கால்வாயில் உடலை புதைத்தை போலீஸ் கண்டிபிடித்து விட்டது.
நாமக்கல் மாவட்டம் காளியாபாளையத்தை சேர்ந்த விஜயலட்சுமியை ஏமாற்றி சென்னைக்கு அழைத்து வந்த நடராஜன், மனைவியை கொடூரமாக கொலை செய்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நடராஜனை சென்னைக்கு அழைத்து வந்த போலீசார் விஜயலட்சுமியின் உடலை தோண்டி எடுத்து அங்கேயே வைத்து பிரேத பரிசோதனை செய்தனர். பின்னர் காட்டுப்பாக்கத்தில் உள்ள சுடுகாட்டில் விஜயலட்சுமியின் உடல் அடக்கம் செய்யப்பட்டது. பின்னர் பேராசிரியர் நடராஜனை போலீசார் பரமத்திவேலூருக்கு அழைத்துச் சென்றனர்.
கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனை டாக்டர் குழுவினர் நடத்திய பிரேத பரிசோதனையில் விஜயலட்சுமியை, நடராஜன் மிகவும் கொடூரமாக குத்திக்கொலை செய்திருப்பது தெரியவந்தது.
நண்பர் ஒருவரின் ரகசிய காதல் திருமணத்துக்கு செல்லவேண்டும் என்று கூறி காட்டுப்பாக்கத்தில் காதலிகளுடன் உல்லாசம் அனுபவிப்பதற்காக வாடகைக்கு எடுத்துப் போட்டுள்ள வீட்டுக்கு விஜயலட்சுமியை அழைத்துச் சென்ற நடராஜன், நள்ளிரவு 12 மணி அளவில் வெளியில் சென்று காற்று வாங்கிவிட்டு வரலாம் என்று கூறி மனைவி விஜயலட்சுமியை அழைத்து சென்றுள்ளார்.
வெளியில் செல்வதற்கு முன்னால் ஓட்கா மதுபானம் கலந்த குளிர்பானத்தை நடராஜன், விஜயலட்சுமிக்கு கொடுத்துள்ளார். பின்னர் வீட்டு அருகே உள்ள கிருஷ்ணா கால்வாய் பகுதிக்கு அழைத்துச் சென்றுள்ள நடராஜன் விஜயலட்சுமியை கீழே தள்ளிவிட்டு மார்பில் கத்தியால் குத்தியுள்ளார்.
மயக்கத்தில் இருந்த விஜயலட்சுமி நிலைகுலைந்ததோடு அவரால் சத்தம் எதுவும் போட முடியவில்லை. முதலில் விஜயலட்சுமியின் கழுத்தில் கத்தியால் குத்தியுள்ளார். ரத்த வெள்ளத்தில் கிடந்த விஜயலட்மியின் உடலில் 11 இடங்களில் சரமாரியாக குத்தியுள்ளார் நடராஜன். கள்ளக்காதல் மயக்கத்தில் இருந்த நடராஜன், முகத்தில் பெரிய பாராங்கல்லை தூக்கிப் போட்டுவிட்டு நகைகளை கழற்றி விட்டு குழி தோண்டி புதைத்து விட்டு எதுவும் தெரியாதது போல காட்டுப்பாக்கத்தில் உள்ள வீட்டுக்கு சென்றுவிட்டார். 40 நாட்களுக்கு பின்னர் போலீசின் பிடியில் சிக்க இருந்த நிலையில் நீதிமன்றத்தில் நடராஜன் சரணடைந்துள்ளார்.
விஜயலட்சுமி கொலை செய்யப்பட்டபோது நடராஜனின் கள்ளக்காதலியான கிருஷ்ணகிரியை சேர்ந்த சித்ரா என்பவரும் வீட்டில் இருந்துள்ளார். கொலை பற்றிய முழு விவரமும் தெரியும் என்பதால் அவரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். நடராஜன் சரணடைவதற்கு முன்பே இவரை போலீசார் பிடித்துவிட்டனர். இவர் மூலமாகத்தான் கொலையில் துப்பு துலங்கியது. நடராஜன் ஒரு கொலையாளி என்பது தெரியவந்ததும் அவனது தாய், தந்தை, சகோதரன் ஆகியோர் போலீஸ் விசாரணைக்கு பயந்து தலைமறைவாகிவிட்டனர்.
‘நடராஜனிடம் எவ்வளவுதான் தீவிரமாக விசாரித்தாலும் அவர் தொடர்ந்து பொய் சொல்லித்தான் வருகிறார். அவர் கூறிய பல தகவல்கள் முன்னுக்குப்பின் முரணாகவே உள்ளன. அவர் மீது தொடர்ந்து பல சந்தேகங்கள் எழுந்துள்ளது. கைதேர்ந்த குற்றவாளிபோல்தான் அவரது நடவடிக்கை இருக்கிறது’ என்று போலீசார் கூறியுள்ளனர்.