க‌ர்நாடகாவு‌க்கு கட‌த்த முய‌ன்ற 30 மூட்டை ரேஷ‌ன் அரிசி பறிமுதல்

வெள்ளி, 3 ஆகஸ்ட் 2012 (14:12 IST)
சென்னையிலிருந்தகர்நாடக‌த்து‌க்கு கடத்த மு‌ய‌ன்ற 30 மூட்டரேஷனஅரிசியை போ‌‌லீசா‌ர் பறிமுதலசெய்து‌ள்ளன‌ர். இ‌ந்த அரிசியை 4 முத‌ல் 5 ரூபாய் வரை வாங்கி அதிவிலையிலி‌ற்க‌ப்படு‌கிறது.

சென்னையை அடு‌த்த மதுரவாயிலஅருகில் சோதனைசாவடி அருகே காவ‌ல்துறை‌யின‌ர் வாகன த‌ணி‌க்கை‌யி‌ல் ஈடுப‌ட்டு‌க் கொ‌ண்டி‌ரு‌ந்தன‌ர்.

அப்போது, வேகமாக வ‌ந்த வாகன‌ம் ஒ‌ன்று ‌நி‌ற்காம‌ல் செ‌ன்றது. இதையடு‌த்து கா‌வ‌ல்துறை‌யின‌ர் அ‌ந்த வாகன‌த்தை மட‌க்‌கி ‌பிடி‌த்தன‌ர். ‌அ‌ப்போது வாகன‌த்‌தி‌ல் இரு‌ந்தவ‌ர்க‌ள் அ‌ங்‌கிரு‌ந்து த‌ப்‌பி ஓடி ‌வி‌ட்டன‌ர்.

பி‌ன்‌ன‌ர் அ‌ந்த வாகன‌த்தை சோதனை‌யி‌ட்டபோது 30 மூ‌ட்டை ரேஷனஅரிசி இரு‌ந்தது க‌ண்டு‌பிடி‌க்க‌ப்ப‌ட்டது. அவ‌ற்றை ப‌‌றிமுத‌ல் ச‌ெ‌ய்த காவ‌ல்துறை‌யின‌ர் த‌ப்‌பிய ஓடியவ‌ர்களை தேடி வரு‌கி‌ன்றன‌ர்.

வெப்துனியாவைப் படிக்கவும்