கோவையில் உலகத்தமிழர் பாதுகாப்பு மாநாடு: புதிய தமிழகம் கிருஷ்ணசாமி

வெள்ளி, 23 அக்டோபர் 2009 (11:36 IST)
இலங்கைத் தமிழர்களின் அரசியல் விடுதலைக்காக கோவையில் பிப்ரவரி 6, 7ஆம் தேதிகளில் உலகத் தமிழர் பாதுகாப்பு மாநாடு நடைபெறும் என்று புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி தெரிவித்துள்ளார்.

கோவையில் செய்தியாளர்களிடம் பேசிய கிருஷ்ணசாமி, கோவையில் உள்ள வ.உ.சி. மைதானத்தில் வரும் பிப்ரவரி மாதம் 6 மற்றும் 7ஆம் தேதிகளில் இலங்கை தமிழர்களின் அரசில் விடுதலைக்காக உலகளவிலான உலகத் தமிழர் பாதுகாப்பு மாநாடு நடத்தப்படும். இந்த மாநாடு முழுக்க முழுக்க அரசியல் கலப்பற்றதாக இருக்கும்.

இந்த மாநாடுக்கான ஏற்பாடுகளை மேற்கொள்வதற்கான குழு விரைவில் அமைக்கப்படும் என்றும், மாநாடு மிகவும் சிறப்பாக நடைபெறும் என்றும் தெரிவித்தார்.

வெப்துனியாவைப் படிக்கவும்