கொலை வழக்கில் இருந்து ராமதாஸ், அன்புமணி விடுவிப்பு
புதன், 4 ஏப்ரல் 2012 (15:29 IST)
WD
அமைச்சர் சி.வி.சண்முகம் உறவினர் கொலையில் டாக்டர் ராமதாஸ், அவரது மகன் அன்புமணி ஆகியோருக்கு தொடர் பில்லை என்று சி.பி.ஐ. தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையில் தெரிவித்துள்ளது.
2006ஆம் ஆண்டு நடந்த சட்டப்பேரவை தேர்தலில் திண்டிவனம் தொகுதி அ.தி.மு.க. வேட்பாளராக அறிவிக்கப்பட்ட அமைச்சர் சி.வி.சண்முகத்தை ஒரு கும்பல் சொல்ல முயன்றது. இதில் சி.வி.சண்முகம் தப்பினார், ஆனால் அவரது உறவினர் முருகானந்தம் படுகொலை செய்யப்பட்டார்.
இந்த கொலை வழக்கில் 20க்கும் மேற்பட்டவர்கள் சேர்க்கப்பட்டனர். ஆனால் கொலையில் பா.ம.க. நிறுவனர் ராமதாஸ், அவரது மகன் அன்புமணி ஆகியோருக்கும் தொடர்பு இருந்ததால் போலீஸார் விசாரணையில் மந்த நிலை ஏற்பட்டது.
இதையடுத்து, சி.பி.ஐ விசாரணை கோரி சி.வி.சண்முகம் மனுவை ஏற்றுக் கொண்ட உயர் நீதிமன்றம் சி.பி.ஐ விசாரணைக்கு உத்தரவிட்டது. இதையடுத்து, ராமதாசின் சகோதர் சீனிவாசன் கைது செய்யப்பட்டார். இதைத் தொடர்ந்து பா.ம.க. நிறுவனர் ராமதாஸ், அன்புமணி ஆகியோரிடம் சி.பி.ஐ. விசாரணை நடத்தியது.
இந்நிலையில் முருகானந்தம் கொலை வழக்கில், சி.பி.ஐ. தனது இறுதி குற்றப்பத்திரிகையை சில தினங்களுக்கு முன்பு செங்கல்பட்டு முதன்மை ஜுடீசியல் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளது.
இதில், குற்றவாளிகள் பட்டியலில் பா.ம.க. நிறுவனர் ராமதாஸ், அவரது மகன் அன்புமணி பெயர் இடம் பெறவில்லை. அதே சமயம் ராமதாசின் சகோதரர் உள்பட 22 பேர் பெயர் குற்றப்பத்திரிகையில் சேர்க்கப்பட்டுள்ளது.