கூடுதல் பணம் இருந்தால் தண்டனை: லஞ்சத்தை ஒழிக்க போக்குவரத்து போலீசாருக்கு எச்சரிக்கை
சனி, 18 பிப்ரவரி 2012 (18:02 IST)
போக்குவரத்து போலீசாரிடம் அளவுக்கு அதிகமான பணம் இருந்தால் தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று போக்குவரத்து காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
இது தொடர்பாக போக்குவரத்து காவல்துறை விடுத்துள்ள சுற்றறிக்கையில்,
போக்குவரத்து பணியில் ஈடுபட்டிருக்கும் காவலர்கள் தங்களுடைய பாக்கெட்டில் மிக குறைந்த அளவில் மட்டுமே செலவுக்காக பணம் வைத்திருக்க வேண்டும். அப்படி வைத்திருக்கும் பணத்தின் சீரியல் எண்ணை அவர்கள் பணியின் போது வைத்திருக்கும் நோட் புத்தகத்தில் எழுதி வைக்க வேண்டும்.
அதிகாரிகள் சோதனை செய்யும் போது அதற்கு அதிகமாக பணம் வைத்திருந்தால் தகுந்த தண்டனை கொடுக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.
வீட்டில் இருந்து பணிக்கு வந்து பிறகு வீட்டிற்கு ஏதேனும் பொருட்களை வாங்கி செல்ல பணத்தை கொண்டு வந்தாலும் அதிகாரிகள் சோதனையின் போது மாட்டிக் கொண்டால் உள்ளதும் போய்விடும் என்று போக்குவரத்து போலீசார் தெரிவிக்கின்றனர்.
இருந்தபோதிலும் பொதுமக்கள் இதற்கு வரவேற்பு தெரிவித்துள்ளனர்.