கூடுதல் காவ‌ல்துறை க‌ண்கா‌ணி‌ப்பாள‌ர்க‌ள் 4 பேரு‌க்கு பதவி உயர்வு

சனி, 4 ஜூலை 2009 (10:37 IST)
நா‌ன்கு கூடுதல் காவ‌ல்துறை க‌ண்கா‌ணி‌ப்பாள‌ர்க‌ள், க‌ண்கா‌‌ணி‌ப்பாள‌ர்களாக பதவி உயர்வு பெற்றுள்ளனர். இத‌ற்கான உ‌த்தரவை த‌மிழக அரசு ‌பிற‌ப்‌பி‌த்து‌ள்ளது.

ென்னை மத்திய குற்றப்பிரிவு கூடுதல் துணை ஆணையராக உ‌ள்ள சின்னத்தம்பி பதவி உயர்வு பெற்று சென்னை பொருளாதார குற்றப்பிரிவு க‌ண்கா‌ணி‌ப்பாளராக (2) நியமிக்கப்பட்டுள்ளார்.

இதேபோ‌ல் கோவை நகர மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு கூடுதல் துணை ஆணைய‌ர் சிவமூர்த்தி பதவி உயர்வு பெற்று, சென்னை கொள்ளை தடுப்பு க‌ண்கா‌ணி‌ப்பாளராக ‌நிய‌மி‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளா‌ர்.

சென்னை குற்றப்பிரிவு விசேஷ பிரிவில் கூடுதல் க‌ண்கா‌ணி‌ப்பாளராக உள்ள ராமகிருஷ்ணன் பதவி உயர்த்தப்பட்டு, லஞ்ச ஒழிப்பு பிரிவு தெற்கு சரக க‌ண்கா‌ணி‌ப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

சென்னை காவ‌ல்துறை பயிற்சி கல்லூரியில் கூடுதல் க‌ண்கா‌ணி‌ப்பாள‌ர் மற்றும் துணை முதல்வராக உள்ள மோகன் க‌ண்கா‌ணி‌ப்பாளராக பதவி உயர்வு பெற்று, சென்னை வணிக குற்ற புலனாய்வு பிரிவு க‌ண்கா‌ணி‌ப்பாளராக ‌நிய‌மி‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளா‌ர்.

வெப்துனியாவைப் படிக்கவும்