கூடங்குளம்: மீண்டும் உண்ணாவிரத போராட்டம்

ஞாயிறு, 9 அக்டோபர் 2011 (12:33 IST)
கூடங்குளம் அணுமின்நிலைய திட்டத்தை உடனடியாக கைவிட வலியுறுத்தி கூடங்குளம் அருகே உள்ள இடிந்தகரை மக்கள் மீண்டும் காலவரையற்ற உண்ணாவிரதத்தை தொடங்கியுள்ளனர்.

மத்திய,மாநில அரசுகளைச் சந்தித்து தங்கள் நிலையை வலியுறுத்திய பின்னர், தகுந்த நடவடிக்கை எதிர்பார்த்தும் தக்க உறுதிமொழி எதுவும் கிடைக்காததால் மீண்டும் காலவரையறையற்ற உண்ணாவிரதத்தை துவங்குவதாக இடிந்தகரை மக்கள் அறிவித்தனர்.

அதன்படி, இன்று காலை முதல் மீண்டும் உண்ணாவிரதப் போராட்டத்தை துவக்கினர்.இந்த உண்ணாவிரதத்தில் சுமார் 5000 க்கும் அதிகமானோர் பங்கேற்றுள்ளனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்