கூடங்குளம் அணு உலை பாதுகாப்பானது : வல்லுநர் குழு தமிழக அரசிடம் அறிக்கை தாக்கல்!
செவ்வாய், 28 பிப்ரவரி 2012 (18:11 IST)
கூடங்குளம் அணு உலை பிரச்சினை தொடர்பாக தமிழக அரசு நியமித்த வல்லுநர் குழு இன்று தமிழக முதல்வரிடம் அறிக்கை சமர்பித்தது.
தமிழக அரசின் வல்லுநர் குழுவில், ஆய்வு மையத்தின் பேராசிரியர் மற்றும் இயக்குனர் எஸ் இனியன், அண்ணா பல்கலை கழகத்தின் இயற்பியல் துறை பேராசிரியர் அறிவு ஒளி, ஓய்வு பெற்ற ஐ ஏ எஸ் அதிகாரி எல் என் விஜயராகவன் , அணு மின் சக்தி கழக முன்னாள் தலைவர் எம் ஆர் சீனிவாசன் ஆகிய நால்வர் அடங்கிய குழு இன்று தன் அறிக்கையை தமிழக முதல்வர் ஜெயலலிதாவிடம் சமர்பித்தனர்.
அந்த ஆய்வறிக்கையில் , கூடங்குளம் அணு உலை பாதுகாப்பானது என தெரிவித்துள்ளது. இந்நிலையில் அணு உலைக்கு எதிரான போராட்ட குழு தமிழக முதல்வர் ஜெயலலிதாவை சந்திக்க உள்ளனர்.