சேது சமுத்திர திட்டத்தை விரைவாக நிறைவேற்ற வலியுறுத்தி, தி.மு.க. கூட்டணி கட்சிகள் 2007ம் ஆண்டு அக்டோபர் 1ஆம் தேதி, தமிழகம் முழுவதும் முழு அடைப்பு போராட்டம் நடத்துவதாக அறிவித்தன.
இதை எதிர்த்து அ.இ.அ.தி.மு.க. சார்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அதை விசாரித்த உச்ச நீதிமன்றம், முழு அடைப்பு நடத்த தடை விதித்தது.
இதையடுத்து, முழு அடைப்புக்கு பதிலாக உண்ணாவிரத போராட்டம் நடைபெறும் என்று தி.மு.க. கூட்டணி அறிவித்தது. அதன்படி, அக்டோபர் 1ஆம் தேதி உண்ணாவிரதம் நடைபெற்றது.
உண்ணாவிரதம் என்ற பெயரில் முழு அடைப்பு போராட்டம் நடத்தியதாக முதலமைச்சர் கருணாநிதி, மத்திய அமைச்சர் டி.ஆர்.பாலு, அமைச்சர் கே.என்.நேரு, தலைமை செயலளர், காவல்துறை தலைமை இயக்குனர், போக்குவரத்து செயலர் ஆகிய 6 பேர் மீது அ.இ.அ.தி.மு.க. நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்தது.