அவரது பெட்டிகளில் இருந்த பொருட்கள் ஊர்ந்து செல்வதுபோல் இருந்தது. இதையடுத்து அந்த பெட்டிகளை பிரித்து பார்த்தபோது அதில் ரூ.10 லட்சம் மதிப்புள்ள 3,000–க்கும் மேற்பட்ட ஆமைகள் இருந்தன. இவற்றை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், ‘சிறிய வகை சிவப்பு நிற ஆமைகள் ஆகும். இவை மலேசியா, சிங்கப்பூர் போன்ற நாடுகளில் உள்ள நீர்நிலைகள், வனப்பகுதிகளில் இருக்கும். இவற்றை சென்னை கொண்டு வந்து மீன்தொட்டிகளில் வைப்பதற்காக வாஸ்து ஆமைகள் என விற்பனை செய்யப்படுகிறது. ஆமைகளை மீண்டும் மலேசியாவிற்கு செல்லும் விமானத்தில் திருப்பி அனுப்ப முடிவு செய்யப்பட்டு உள்ளது’ என்றனர்.