கச்சத்தீவை மீட்பதால் பயனில்லை- ஞானதேசிகன்

வியாழன், 9 பிப்ரவரி 2012 (00:28 IST)
கச்சத்தீவை மீட்க வேண்டும் என்ற கோரிக்கையால் எந்த பலனுமில்லை என்றார் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஞானதேசிகன்.

திருப்பூரில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கச்சத்தீவை மீட்க வேண்டும் என்பதில் காங்கிரஸ் கட்சிக்கு கருத்து மாறுபாடு இல்லை. ஆனால், கச்சத்தீவை திரும்பப் பெறுவதால் எந்த பலனும் இல்லை.

கச்சத்தீவை சுற்றி மீன்வளம் இல்லை. இருப்பினும் இலங்கைக்கு அருகில் இருந்த தீவு அவர்களுக்குக் கொடுக்கப்பட்டது. காங்கிரஸ் கட்சி அந்தத் தீவை இலங்கைக்குக் கொடுக்கவில்லை என்றார் ஞானதேசிகன்.

மின் தட்டுப்பாடு குறித்து பேசியபோது, தொழில்துறையினர் மற்றும் பொதுமக்கள் மின் தட்டுப்பாடால் பெரும் அவதிக்கு உள்ளாகியிருக்கின்றனர். கூடங்குளம் திட்டம் செயல்படத் தொடங்கினால் இந்தப் பிரச்னைக்கு ஓரளவு தீர்வு காணலாம்.

இதுகுறித்து மத்திய் மாநில அரசுகள் தீவிர நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றார் ஞானதேசிகன்.

வெப்துனியாவைப் படிக்கவும்