உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடுபவர்களின் இறுதிப் பட்டியல் இன்று மாலை வெளியிடப்படுகிறது. ஐந்தரை லட்சத்திற்கு மேல் மனுத் தாக்கல் செய்துள்ளனர். இவர்களில் எத்தனை பேர் போட்டியிடுவார்கள் என்று இன்று தெரிந்துவிடும்.
உள்ளாட்சித் தேர்தலில் மொத்தம் 5 லட்சத்து 27 ஆயிரத்து 14 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். இவர்கள் இன்று மாலை 3 மணி வரை தனது மனுக்களைத் திரும்பப் பெற்றுக் கொள்ளலாம்.
இந்தத் தேர்தலில் நகர்ப்புறப் பகுதியில் 80,500 மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்பட உள்ளன. ஊரகப் பகுதியில் 2.39 லட்சம் வாக்குப்பெட்டிகள் பயன்படுத்தப்படுகின்றன.
தமிழகத்தில் மொத்தம் 4 கோடியே 63 லட்சத்து 37 ஆயிரத்து 37 வாக்காளர்கள் உள்ளனர்.