உண்ணாவிரதம் இருக்கும் ஈழத் தமிழ் அகதிகளை விடுதலை செய்க: சீமான்

திங்கள், 2 மே 2011 (14:25 IST)
பூந்தமல்லி சிறப்பு முகாமில் வழக்கேதுமின்றி அடைத்து வைக்கப்பட்டுள்ள ஈழத் தமிழ் அகதிகள் 4 பேரையும் உடனடியாக விடுவிக்குமாறு நாம் தமிழர் இயக்கத்தின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தமிழக அரசை கேட்டுக்கொண்டுள்ளார்.

இது தொடர்பாக அவர் இன்று விடுத்துள்ள அறிக்கையில், “செங்கல்பட்டமுகாமில் 23 ஈழத் தமிழர்களும் பூந்தமல்லியில் உள்ள சிறப்பு முகாமில் 4 ஈழத் தமிழர்களும் தமிழக அரசால் அடைத்தவைக்கப் பட்டுள்ளனர். மேற்கண்ட முகாம்களில் அடைத்து வைக்கப்பட்டு இருப்பவர்கள் குற்வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டும், உரிய முறையில் பிணை பெற்றும் இருக்கின்றனர். ஆனால் தமிழக அரசு அவர்களை சட்டத்திற்குப் புறம்பாக சிறப்பு முகாம் என்ற பெயரிலஅங்கு அடைத்து வைத்துள்ளது.

இந்நிலையிலகங்காதரன், சந்திரகுமார், அமலன், ஜெயமோகன் ஆகிய 4 பேரும் தங்களை விடுவிக்கக் கோரி பூந்தமல்லி முகாமில் கடந்த 12 நாட்களாக உண்ணாவிரதம் இருந்து வருகின்றனர். ஆனாலஇவர்களின் கூக்குரல் இதுவரை தமிழக அரசுக்கு எட்டவில்லை அல்லது எட்டினாலும் ஒன்றுமநடக்காதது போல கள்ள மவுனம் காத்து வருகிறது.

நாட்டில் நடப்பது தொடர் அரசு தான்; காபந்து அரசு அல்ல. இது உலகுக்குத் தெரியும் என பத்திரிக்கைகளில் பக்கம் பக்கமாஅறிக்கை எழுதி நான் தான் இப்பொழுதும் முதல்வர் என தினமும் மக்களுக்கு நினைவூட்டுமமுதல்வர், மக்களின் மீதான உண்மையான அக்கறையை செயல்பாட்டில் காட்வேண்டும். அதனை விடுத்து நாட்டில் மின்வெட்டு, விலைவாசி உயர்வு என ஆயிரக்கணக்காமக்கள் பிரச்சனைகள் இருந்தாலும் அதில் கவனம் செலுத்தாமல் விரயமாக ஆயிரம் கோடி மக்கள் வரிப்பணத்தில் கட்டப்பட்டுள்ள தலைமைச் செயலகத்தில் அமர்ந்து மீன்களுக்கபொறி பொட்டுக் கொண்டிருக்கிறார். மீன்களின் உயிரின் மீது காட்டும் அக்கறையிலசிறிதளவாவது நம் அனைவரின் கண் முன்னும் சாகக் கிடக்கும் எம் சொந்தங்களின் மீதகாட்ட வேண்டும். ஆகவே உடனே தமிழக அரசு உண்ணாவிரதம் இருக்கும் பூந்தமல்லி மற்றுமசெங்கல்பட்டு அகதிகளை விடுதலை செய்ய வேண்டும்” என்று சீமான் கேட்டுக்கொண்டுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்