ஈ‌வ் டீ‌சி‌ங்: நாக‌ர்கோ‌வி‌‌லி‌ல் முதுகலை க‌ல்லூ‌‌ரி மாண‌வி ‌தீ‌க்கு‌ளி‌த்தா‌ர்!

வெள்ளி, 22 ஆகஸ்ட் 2008 (16:38 IST)
க‌ன்‌‌னியாகும‌ரி மாவ‌ட்ட‌ம் நாக‌ர்கோ‌வி‌‌லி‌ல் சக வகு‌ப்பு மாணவ‌ர் ‌ஈ‌வ்-டீ‌சி‌ங் செ‌ய்ததா‌ல் முதுகலை க‌ல்லூ‌‌ரி மாண‌வி ‌தீ‌க்கு‌‌‌ளி‌த்தா‌ர். இதனா‌ல் அவ‌ர் பல‌த்த காய‌ங்களுட‌ன் மரு‌த்துவமனை‌யி‌ல் உ‌‌யிரு‌க்கு போராடி வரு‌கிறா‌ர்.

த‌னியா‌ர் க‌ல்லூ‌ரி ஒ‌ன்‌றி‌ல் எ‌ம்.ஏ., முதுகலை இர‌ண்டா‌ம் ஆ‌ண்டு ப‌யி‌ன்று வரு‌ம் இந்த 20 வயது மாண‌வியை சக வகு‌ப்பு மாணவரான சுபா‌ஷ் எ‌ன்பவ‌ர் கட‌ந்த நா‌ன்கு மாதமாகவே தொட‌ர்‌ந்து அவ‌ர் ‌பி‌ன்ன‌ா‌‌ல் ச‌ெ‌ன்று கி‌ண்ட‌ல், கே‌லி பே‌சி‌யு‌ள்ளா‌‌ர்.

இதனா‌ல் வா‌ழ்‌க்கையை வெ‌று‌த்த மாண‌வி தனது ‌வீ‌ட்டி‌ல் ‌இ‌ன்று தீ‌க்கு‌‌ளி‌த்தா‌ர். இதையடு‌த்து அவ‌ர் ஆசா‌ரி‌ப்ப‌ள்ள‌ம் மரு‌த்துவ‌க் க‌ல்லூ‌ரி மரு‌த்துவமனை‌யி‌ல் ‌சி‌கி‌ச்சை‌க்காக அனும‌தி‌க்க‌ப்‌பட்டு‌ள்ளா‌ர்.

மாண‌வி‌க்கு பல‌த்த ‌‌தீ‌க்காய‌ம் ஏ‌ற்ப‌ட்டிரு‌ப்பதா‌ல் மரு‌த்துவமனை‌யி‌ல் அவ‌ர் உ‌யிரு‌க்கு‌ப் போராடி வரு‌கிறா‌ர். இ‌ச்ச‌ம்பவ‌ம் கு‌றி‌த்து ‌விசாரணை நட‌த்‌திய காவ‌ல் துறை‌யின‌ர் மாணவ‌ர் சுபா‌ஷ்-ஐ வலை‌‌‌வீ‌சி தேடி வரு‌கி‌ன்றன‌ர்.

வெப்துனியாவைப் படிக்கவும்