இன்று முதல் சென்னையில் பிறக்கும் குழந்தைகளுக்கு மரக்கன்று!

செவ்வாய், 15 செப்டம்பர் 2009 (13:39 IST)
அறிஞர் அண்ணாவின் பிறந்த நாளை முன்னிட்டு இன்று இரவு 12 மணி முதல், சென்னை மாநகராட்சியில் பிறக்கும் குழந்தைகளுக்கு மரக்கன்று வழங்கப்படுகிறது.

அதன்படி, இன்று முதல் பிறக்கும் ஒவ்வொரு குழந்தையின் வீட்டின் முன்பாக சென்னை மாநகராட்சி சார்பில் மரக்கன்றுகள் நடப்படும். மரக்கன்றுகளுக்கு வேலி அமைக்கப்படும். அந்த மரக்கன்றுக்கு குழந்தையின் பெயர் சூட்டப்பட்டு, அதற்குரிய பெற்றோர்களிடம் வழங்கப்படும்.

வீட்டின் எதிரே நடும் வாய்ப்பு இல்லாத சூழ்நிலை ஏற்பட்டாலும், அந்த மரக்கன்று மாநகராட்சி மைதானங்களில் அல்லது பூங்காக்களில் நடப்படும். இதுதொடர்பான சான்றிதழ் பெற்றோர்களிடம் வழங்கப்படும்.

சென்னை நகரை பசுமையாக்கும் நடவடிக்கையாக இந்த திட்டம் இன்று முதல் அமல்படுத்தப்படுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்