இந்திய கம்யூனிஸ்ட் கட்சி எம்.எல்.ஏ மறைவுக்கு ஜெயலலிதா இரங்கல்
ஞாயிறு, 1 ஏப்ரல் 2012 (17:55 IST)
FILE
புதுக்கோட்டை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சட்டமன்ற உறுப்பினர் முத்துக்குமரன் மறைவுக்கு தமிழக முதல் அமைச்சர் ஜெயலலிதா இரங்கல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட இரங்கல் செய்தியில்,
சிறிதுகாலமே சட்டப்பேரவை உறுப்பினராக பணியாற்றினாலும், சிறப்புடனும், திறம்படவும் பணியாற்றி அனைவரின் அன்பையும் பெற்றவர் முத்துக்குமரன்.
அவரின் மறைவு கம்யூனிஸ்ட் கட்சிக்கு பேரிழப்பாகும், அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்துக்கும் , கம்யூனிஸ்ட் கட்சிக்கும் ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.