புதுக்கோட்டையில் நடைபெற உள்ள இடைத்தேர்தலில் போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்திருந்த புதுக்கோட்டை மாவட்ட ரஜினி ரசிகர் மன்ற செயலாளர் ஸ்ரீதர், இன்று தனது வேட்பு மனுவை திரும்பப் பெற்றுக் கொண்டார்.
புதுக்கோட்டை சட்டமன்ற தொகுதிக்கு ஜூன் 12ஆம் தேதி இடைத்தேர்தல் நடக்க உள்ளது. இடைத்தேர்தலில் அ.தி.மு.க., தே.மு.தி.க. கட்சிகள் இடையே நேரடி போட்டி நிலவுகிறது.
இதனிடையே இடைத்தேர்தலில் போட்டியிட தான் யாருக்கும் அனுமதி வழங்கவில்லை என்றும், தேர்தலில் போட்டியிடுவோர் ரஜினி ரசிகர் மன்றப் பெயரையோ, கொடியையோ பயன்படுத்தக் கூடாது என்று ரஜினிகாந்த் கூறினார்.
இதைடுத்து, வேட்பு மனுக்களை திரும்பப் பெற கடைசி நாளான இன்று, ரஜினிகாந்த் ரசிகர் மன்ற செயலர் ஸ்ரீதர் தனது வேட்பு மனுவை திரும்பப் பெற்றுக் கொண்டார்.