பர்கூர், தொண்டாமுத்தூர், கம்பம், இளையான்குடி, ஸ்ரீவைகுண்டம் ஆகிய தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வரும் 18ஆம் தேதி நடைபெறுகிறது. இதற்கான மனு தாக்கல் கடந்த மாதம் 22ஆம் தேதி முதல் 29ஆம் தேதி வரை நடந்தது.
5 தொகுதிகளிலும் போட்டியிட மொத்தம் 160 பேர் வேட்பு மனுத்தாக்கல் செய்திருந்தனர். மனுக்கள் 30ஆம் தேதி பரிசீலனை செய்யப்பட்டன. இதில் 53 மனுக்கள் நிராகரிக்கப்பட்டது. 67 மனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டது.
போட்டியிட விரும்பாதவர்கள் வேட்பு மனுக்களை இன்று மாலை 3 மணி வரை வாபஸ் பெற்றுக் கொள்ளலாம் என்று தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. இதைத் தொடர்ந்து இன்று பிற்பகல் 3.15 மணிக்கு வேட்பாளர்களின் இறுதிப் பட்டியலை தேர்தல் ஆணையம் வெளியிட்டது.