இடைத்தேர்தல்: நாளை விருப்ப மனு தாக்கல் செய்யலாம்-பிஜேபி
சனி, 18 பிப்ரவரி 2012 (15:53 IST)
சங்கரன்கோவில் இடைத்தேர்தலில் பாஜக சார்பில் போட்டியிட விரும்புவோர் நாளை விருப்ப மனுக்களை தாக்கல் செய்யலாம் என தமிழக பாஜக தலைவர் பொன்.ராதாகிருஷணன் கூறியுள்ளார்.
மாநில பொதுச்செயலாளரும் தேர்தல் குழு உறுப்பினர்களுமான எஸ்.ஆர்.சரவணபெருமாள், சுப.நாகராஜன் மற்றும் எஸ்.சுரேந்திரன் ஆகியோரிடம் விருப்ப மனுக்களை நாளை (பிப்.19) காலை 10 மணி முதல் மதியம் 3 மணி வரை கொடுக்கலாம் என அவர் வெளியிட்டு அறிக்கையில் கூறியுள்ளார்.