ஆ‌சி‌ரிய‌ர் ‌தின‌ம்: ஆளுந‌ர் ரோசையா வா‌ழ்‌த்து

ஞாயிறு, 4 செப்டம்பர் 2011 (17:24 IST)
செ‌ப்ட‌ம்ப‌ர் 5ஆ‌ம் தே‌தி ஆ‌சி‌ரிய‌ர் ‌தின‌‌த்தை மு‌ன்‌னி‌ட்டு த‌மிழக‌த்‌தி‌ன் பு‌திய ஆளுந‌ராக பொறு‌ப்பே‌ற்று‌ள்ள ரோசையா ஆ‌சி‌ரிய‌ர்களு‌க்கு தனது வா‌ழ்‌த்து‌களை‌த் தெ‌ரி‌வி‌த்து‌ள்ளா‌ர்.

இதுகு‌றி‌த்து அவ‌ர் வெ‌ளி‌யி‌ட்டு‌ள்ள செ‌ய்‌தி‌க் கு‌றி‌ப்‌பி‌ல்,

முன்னாள் ஜனாதிபதி டாக்டர் ராதாகிருஷ்ணனின் பிறந்த நாளை ஆசிரியர் தினமாக நாம் கொண்டாடுகிறோம். தரமான கல்வியானது தரமான ஆசிரியர்களை சார்ந்திருக்கிறது. ஆசிரியர்கள் தங்களது ஆன்மாவையும், இதயத்தையும் தரமான கல்வியை அளிக்கவும் மாணவர்களை சிறந்த குடி மகன்களாக உருவாக்கவும் அர்ப்பணிக்க வேண்டும்.

சமூகத்தில் ஆசிரியர்கள் செயல்கள் மற்றும் நடத்தைகளால் முன்மாதிரியாக திகழ வேண்டும். இந்த நாளில் ஆசிரியர்கள் அனைவருக்கும் எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன் எ‌ன்று ஆளுந‌ர் ரோசையா கு‌றி‌ப்‌பி‌ட்டு‌ள்ளா‌ர்.

வெப்துனியாவைப் படிக்கவும்