ஆன்லை‌னி‌ல் மின்கட்டணம் செலுத்தலா‌ம்

புதன், 3 ஜூன் 2009 (12:53 IST)
செ‌ன்னை நகர எ‌ல்லை‌க்கு உ‌ட்ப‌ட்டவ‌ர்களு‌ம், செ‌ங்க‌ல்ப‌ட்டு வ‌ட்‌ட‌த்த‌ி‌ல் உ‌ள்ள தா‌ழ்வழு‌த்த ‌மி‌ன் நுக‌ர்வோ‌ர்களு‌ம் ஆ‌ன்லை‌ன் மூல‌ம் ‌மி‌ன்க‌ட்டண‌ம் செலு‌த்‌தலா‌ம் எ‌ன்று தமிழ்நாடு மின்வாரியம் தெ‌ரி‌வி‌த்‌து‌ள்ளது.

இது தொட‌‌ர்பாக தமிழ்நாடு மின்வாரியம் வெளியிட்டுள்ள செ‌ய்‌தி‌க்கு‌றி‌ப்‌பி‌ல், தமிழ்நாடு மின்வாரியம், இந்தியன் ஓவர்சீஸ் வங்கியுடன் செய்துள்ள ஒப்பந்தப்படி, வங்கி வாடிக்கையாளர்கள் மின்கட்டணத்தை ஆன்லைனில் செலுத்தலாம். இந்த மாதம் முதல் திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது.

இதன்மூலம் சென்னை நகர எல்லைக்கு உட்பட்ட பகுதி மற்றும் செங்கல்பட்டு வட்டத்தில் உள்ள தாழ்வழுத்த மின் நுகர்வோர்கள் பயன்பெறலாம். இதற்கு மின்வாரிய இணையதளத்தை பயன்படுத்தி கொள்ளலாம். விரைவில் மற்ற நகரங்களுக்கும் இத்திட்டம் விரிவுபடுத்தப்படும் எ‌ன்று தெ‌ரி‌வி‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்