ஆடிட்டர் ரமேஷ் நண்பர் திடீர் மரணம்

திங்கள், 22 ஜூலை 2013 (08:36 IST)
FILE
சேலத்தையடுத்த ஓமலூர் எம்.செட்டிப்பட்டி பகுதியை சேர்ந்தவர் முருகமணி(வயது 52). இவர் பாரதீய ஜனதா கட்சியில் மாவட்ட செயற்குழு உறுப்பினராக இருந்து வந்தார்.

முருகமணி ஆடிட்டர் ரமேசின் நெருங்கிய நண்பர் ஆவார். ஆடிட்டர் ரமேஷ் படுகொலை செய்யப்பட்டார் என்ற செய்தியை கேள்விப்பட்டதும் முருகமணி சேலம் விரைந்து வந்தார்.

சேலம் வந்த அவர் ஆடிட்டர் ரமேசின் உடலை பார்த்து கதறி அழுதார். பின்னர் அவர் இறுதி ஊர்வலத்திலும் கலந்து கொண்டார். அப்போதும் முருகமணி அழுதப்படியே இருந்தார். இவரை பாரதீய ஜனதா கட்சி நிர்வாகிகள் தேற்றினர்.

இந்த நிலையில், சோகத்துடனே காணப்பட்ட அவருக்கு நேற்று முன்தினம் இரவு வீட்டில் திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. பின்னர் சிறிது நேரத்தில் முருகமணி பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து தகவல் கிடைத்ததும் பாரதீய ஜனதா கட்சி நிர்வாகிகள் ஓமலூர் எம்.செட்டிப்பட்டிக்கு சென்று அவரது உடலுக்கு மலர்மாலை வைத்து அஞ்சலி செலுத்தினர். இந்த சம்பவம் அந்த பகுதியை சோகத்தில் ஆழ்த்தியது.

வெப்துனியாவைப் படிக்கவும்