ஆசைக்கு இணைங்க மறுத்த பெண்ணை அரிவாளால் வெட்டி கொல்ல முயற்சி

ஞாயிறு, 22 செப்டம்பர் 2013 (16:50 IST)
FILE
தேனி அருகே ஆசைக்கு இணைங்க மறுத்த பெண்ணை அரிவாளால் வெட்டி கொல்ல முயற்சித்தவர் கைது செய்யப்பட்டார்.

தேனி மாவட்டம் ஜெயமங்களம் அருகில் உள்ள குள்ளபுரத்தை சேர்ந்தவர் முனியான்டி, இவரது மனைவி வேலம்மாள். இவர்களுக்கு 2 மகள்களும், ஒரு மகனும் உள்ளனர். கணவன் மனைவியிடையே ஏற்பட்ட தகராறு காரணமாக முனியான்டி கடந்த 15 நாட்களுக்கு முன்பு கேரளாவுக்கு வேலைக்கு சென்றுவிட்டார். வேலம்மாள் கூலி வேலை பார்த்து வருகிறார்.

இதனை நோட்டமிட்ட இதே பகுதியை சேர்ந்த பாண்டி என்பவர் வேலம்மாளிடம் உனது கணவர்தான் வெளியூர் சென்றுவிட்டாரே நாம் இருவரும் சந்தோசமாக இருக்கலாம் என்று கூறி அவரை தனது ஆசைக்கு இணங்க வற்புறுத்தினார். ஆனால் வேலம்மாள் அதற்கு சம்மதிக்கவில்லை.

தொடர்ந்து அவரை பாண்டி ஆசைக்கு இணங்குமாறு வற்புறுத்தி வந்தார். நேற்று மாலை தோட்டத்தில் வேலை பார்த்துக் கொண்டிருந்தபோது அங்கு வந்த பாண்டி அவரை மானபங்கபடுத்த முயன்றார். வேலம்மாள் சத்தம்போடவே பாண்டி அரிவாளால் அவரை பல இடங்களில் வெட்டிவிட்டு தப்பியோடிவிட்டார். இதில் படுகாயம் அடைந்த வேலம்மாள் தேனி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார்.

ஜெயமங்களம் போலீசார் வழக்கு பதிவு செய்து பாண்டியை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

வெப்துனியாவைப் படிக்கவும்