சேலத்தில் உள்ள அவருடைய குலதெய்வமான அப்பாபைத்தியசாமி கோவிலுக்கு இன்று வந்திருந்தார்.
சாமி கும்பிட்டுவிட்டு வெளியே வந்த அவரிடம் செய்தியாளர்கள், புதுச்சேரியில் உள்ள அரசியல் சூழல் குறித்தும், அமைச்சரவை குறித்தும் கேள்வி எழுப்பினர்.
இதற்கு பதில் அளித்த ரங்கசாமி, விரைவில் அமைச்சரவை விரிவாக்கப்படும் என்றும், அமைச்சரவை விரிவாக்கத்தின்போது, கூட்டணிக் கட்சியினரும் அமைச்சரவையில் சேர்க்கப்படுவார்கள் என்றும் தெரிவித்தார்.
அமைச்சரவை விரிவாக்கம் எப்போது என்ற கேள்விக்கு, விரைவில் இருக்கும் என்றார் ரங்கசாமி.