அவர்களது வழக்கப்படி, நவராத்திரியின் 10ம் நாள் (நாம் விஜயதசமி என்று கொண்டாடுகிறோம்) ராவணனை வழிபடுகின்றனர். ராவணனை சிறப்பிக்கும் வகையில் பல்வேறு நிகழ்ச்சிகளும் நடத்தப்படுகின்றன. ராமருக்கும், ராவணனுக்கும் போர் நடக்கிறது. இந்த நிகழ்ச்சி அங்கு மிகவும் பிரபலமானதாகும். இதில் நூற்றுக்கணக்கான மக்கள் கலந்து கொள்கின்றனர்.
ராவணன் கோயிலின் பூசாரி பாபுபாய் ராவண் தான் ராவணனுக்கான அனைத்து பூஜைகளையும் செய்கிறார். அக்கிராமத்தில் எந்தவிதமான பிரச்சினை வந்தாலும் மக்கள் உடனே பாபுபாய் ராவணனிடம் செல்கின்றனர். உடனே ராவணனின் திருவுருவச் சிலை முன்பு அமர்ந்து விரதமிருக்கும் பாபுபாய், பிரச்சினை தீர்ந்த பின்னர்தான் தனது விரதத்தை முடிக்கிறார்.
ஒரு முறை அந்த கிராமம் மற்றும் அதனைச் சுற்றியிருக்கும் பகுதிகளில் கடுமையான தண்ணீர் பஞ்சம் ஏற்பட்டது. உடனே பாபுபாய் விரதமிருக்கத் துவங்கினார். என்ன அதிசயம் 3 நாட்களில் பேய் மழை பெய்து ஊரணிகள் நிரம்பி வழிந்தன.