கணிப்பொறி வைத்து கவிதை- சிக்கவிலை கண் சிமிட்டி வந்த வரிகள்- மையலாகப் புன்னகைத்து மயக்கின சில வார்த்தைகளும்- கோடை காலத்து மாலைக் கடற்கரை அலைகளாக வருடி மறைந்தன வரிகள் அவலங்கள், சோகங்கள் துக்கங்கள் வீழ்த்த நா வடுக்களாக வேர்கண்ட வரிகள்தான் மனக்கணக்கு எதற்கு கணிப்பொறி? மனக்கவிதை