[கவிஞர் ச.விசயலட்சுமி தமிழாசிரியராக பணிபுரிந்து வருபவர். முரண்களரி அமைப்பாளர்களில் ஒருவர். "பெருவெளிப்பெண்" கவிதைத் தொகுதி இவரது முதல் தொகுதி. இந்த தொகுதியிலிருந்து சில கவிதைகளை வழங்குகிறோம்]
தீபாராதனை
உடல் சோர்வு உணர்வை அழுத்த
மனசு சுத்தமாயிருந்தால் நாளும் கிழமையுமாய் உட்காருவியா இப்படி...! மூலையில் முடங்கு
தீவிரமானது தீண்டாமை வயிற்றில் முற்றிய வலி வயிற்றுக்குத் தேவையில்லை மருத்துவம் ஆதரவாய் ஒரு பார்வை இல்லை