இணைய வாசகர் ஈஸ்வரன் அனுப்பிய கவிதை.. மறைவோம் எனத் தெரிந்தும் உதயமாக மறுப்பதில்லை சூரியன் சருகாவோம் எனத் தெரிந்தும் மலர மறுப்பதில்லை மலர் தேய்வோம் எனத் தெரிந்தும் ஒளிர மறுப்பதில்லை நிலா இன்பமும் துன்பமும் சேர்ந்தது தான் வாழ்க்கை எனத் தெரிந்தும் வாழத் தயங்கலாமோ?